நீயோ என் நெஞ்சை ஏற்றிட தானா


வெள்ளை உடையில் ஒரு தேவதையோ 
கண்களில் இவளின் கனவா; 

மழையில் மிதக்கும் ஓர் படகாய் 
மிதப்பது எனது மனதா; 

விண்ணிலே பிறந்து வரும் மழை போல் 
மண்ணிலே இறங்கும் பெண்மை இவளோ; 
இறகு கனமாகும் காரணத்தால் 
சிறகு இல்லாத தேவதையோ; 

கடல் பிரிந்து,காற்றோடு திரிந்து ,மழையாய் இறங்கும் ,நீர்த்துளி போல் 
காதலை கொடுத்து ,என்னோடு சேர்ந்து ,வாழ்வை கடக்கும், பெண் இவளோ 

ஓ அரிதாரம் பூசி வாழ்கிறேன் 
ஆதாரமாய் உன்னை கேட்கிறேன் 

உன் எண்ணம் போல் நடக்கிறேன் 
உன்னோடு சேர்ந்து சுவாசிக்கிறேன் நேசிக்கிறேன் 

நீயோ என் நெஞ்சை ஏற்றிட தானா

SHARE ON:

Hello guys, I'm Tien Tran, a freelance web designer and Wordpress nerd. Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam, eaque ipsa quae.

    Blogger Comment

0 comments:

Post a Comment